ஹோட்டலில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு..!

இறக்குவானை மாதம்பை பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து 22 வயதான யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (04.07.2023)அன்று தான் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர் ஒருவரும் குறித்த யுவதியும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளனர். பிறகு குறித்த யுவதியை ஹோட்டல் அறையில் விட்டு விட்டு ,இளைஞன் வெளியில் சென்று பின்னர் மீண்டும் ஹோட்டல் அறைக்கு சென்று இருக்கிறான் .இதன் போது ஹோட்டல் அறையின் கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்து இருக்கிறது.பல முறை கதவினை திறக்க முயற்சித்தும் முடியாத போது ஹோட்டல் நிர்வாகத்திடம் அறிவித்துள்ளார்.பிறகு ஹோட்டல் ஊழியரின் உதவியுடன் ஜன்னலில் பார்த்த போது குறித்த யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ஜன்னல் வழியாக சென்ற இளைஞன் யுவதியை மீட்டு, வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்.எனினும் குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இறந்த யுவதியும் இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *