யாத்திரிகர்களை ஏற்றிய பேருந்து விபத்து…!

மன்னம்பிட்டிய, அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது .

குறித்த பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது

இதன்போது வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 32 மற்றும் 71 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இதே வேளை நேற்று இரவு கதுருவெள்ள பகுதியிலிருந்து காத்தான் குடி நோக்கி சென்ற பேருந்து ஒன்று மன்னம்பிட்டிய பாலத்திற்கு அருகில் இருக்கும் கொடலிய பாலத்தில் விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்பை 11ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *