அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலி..!

அண்மைக்காலமாக அதிகளான விபத்துக்கள் ஏற்படுகின்றன.இதனால் பல உயிர்கள் பரிதாபமாக இவ்வுலகை விட்டு செல்கின்றன. அதிகமான வீதி விபத்துக்களுக்கு காரணம் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் தான்.வேகத்தின் காரணமாக எதிரில் என்ன இருக்கிறது அல்லது என்ன வருகிறது என்று எதுவும் தெரியாமல் வாகனத்தை செலுத்தி செல்கின்றனர்.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

நேற்றைய தினம் அநுராதபுரம் மதவாச்சி பகுதியில் 8 மணியளவில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மரம் ஒன்றுடன் மோதியல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஏ.சில்வஸ்டர் என்ற 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலும் அவருடைய 48 வயதுடைய தந்தை வைத்திய சாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *