நாளைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு..!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளைய தினம் 28ம் திகதி முல்லை தீவு மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிட தக்கது.

இதே வேளை இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு முல்லை தீவு தனியார் போக்கு வரத்து உரிமையாளர் சங்கம் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இதனால் நாளைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *