விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

விமான விபத்தின் போது 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சீனக்குடா விமானப்படை தளத்திலேயே இவ்விபத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

சீனக்குடா, இலங்கை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 விமான பயிற்ச்சி படைப்பிரிவிற்குரிய PT -6 ரக விமானம் விமான பரீட்சனைக்காக இன்று முற்பகல் 11.25 மணிக்கு, சீனக்குடா விமான ஓடுபாதையில் பயணித்தது.இதன் பிகு சிறிது நேரத்தில் 11:27 மணியளவில் சீனக்குடா விமானப்படை தள பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை அறிவித்துள்ளது.

இதன்போது விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

இவ் விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *