வானில் பாய்ந்தது பால்கன்-09..!

சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்கு விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி ரீதியில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிவருகிறது.

இதன் கட்டமாக இக்குழு செல்கின்றமை குறிப்பிடதக்கது.
நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கொமாண்டர் ஜெஸ்மின் மொக்பெலி, ஐரோப்பா விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர் மற்றும் பைலட் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிலையத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் கொன்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் பயணித்துள்ளனர்.

ஏற்கனவே அனுப்பபட்ட குழுவின் பயணக்காலம் முடிவடையும் நிலையில் இவர்கள் தற்போது பயணித்துள்ளனர்.

நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பால்கன்-09 என்ற விண்கலம் ஏவப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *