மேட்டூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா…!

கிருஷ்ண ஜெயந்தி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிக சிறப்பாக கொண்டாடும் ஒரு விழா.இந்த வகையில் 05.09.2023 திகதி சேலம் மாவட்டம் மேட்டூர் பொட்டனேரியில் அமைந்திருக்கும் ஶ்ரீ ராம் வித்தியாலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் ஆசிரியர் தின விழாவும் மிகவும் சிறப்பாக நடந்தது.

இதில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது வண்ணக்கோலங்கள் ,கிருஷ்ணர் பாதம் பதித்தல்,என்பனவும் நடைப்பெற்றமை விசேட அம்சமாகும்.

கிருஷ்ண ஜெயந்தி விழாவினை கொண்டாடுவதால் வீட்டிலும் ,அலுவலகங்களிலும்,பாடசாலைகளிலும் விருத்தியும்,மகிழ்ச்சியும் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *