ஆடைகள் பல வண்ணம்..!

ஆடை

விண்ணுக்கோ நீலவான ஆடை
நிலவுக்கோ மேகம் ஆடை
மண்ணுக்கோ புல் பூவினம் ஆடை
குளத்திற்கோ நீர் ஆடை

விட்டமதில் ஒட்டாடை
பாலிற்க்கோ பாலாடை
பாவைக்கோ பட்டாடை
உயிருக்கோ தோல் ஆடை

உள்ளத்திற்க்கோ உவமை ஆடை
சொல்லிற்க்கோ கவிதை ஆடை
மண்முட்டும் விதைக்கோ இலை ஆடை
பிறக்கும் சொல்லிற்க்கோ இதழ் ஆடை

நா அறியும் தேனாடை
நாமறியும் உறவும் ஆடை
உறவாடும் உள்ளங்களே ஆடைகளாய் இருப்போம் அனைவரது நெஞ்சத்திலும்…
ரகசியம் (கமுக்கம்) காக்கும் காவல் ஆடையாய்…. ஆக்கம் ✍️ இருளம்பட்டு ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *