விமான விபத்தில் 14 பேர் பலி..!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக காணப்படும் பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமேசன் பனஸ் பகுதியிலிருந்து பார்சிலோஸ் நோக்கி குறித்த விமானம் 14 பேருடன் பயணித்தது.இதன் போது அதிக மழையின் காரணமாக பாரசிலோஸில் தரையிறங்கிய நேரம் திடிரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில் சுற்றலா பிரயாணம் மேற்கொண்ட பிரயாணிகள் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியிற்கு சென்ற மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *