இறுதி போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதுகின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆசிய கிண்ண் கிரிக்கட் போட்டியில் இன்றைய தினம் இறுதி போட்டியில் இலங்கை இந்திய அணிகள் பல பரீட்சை நடாத்துகின்றன.

கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைப்பெரும் இப்போட்டியானது 3.00 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது.

இலங்கை இந்திய அணிகள் 8 வது தடவையாக ஆசிய கிண்ண இறுதி போட்டியில் ஒன்றை ஒன்று சந்திக்கின்றமையும் குறிப்பினத்தக்கது.

இதே வேளை நடந்து முடிந்த ஆசிய கிண்ண போட்டிகளில் இந்தியா 7 முறையும்,இலங்கை 6 முறையும் கிண்ணங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷன உபாதைக்காரணமாக விளையாட வில்லை,அதற்கு பதிலாக சஹான் ஆராச்சிகே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதே வேளை இந்திய அணியிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.அக்ஷர் படேல் விலகியுள்ள நிலையில் அதற்கு பதிலாக வொஷிங்டன் சுந்தர் விளையாட இருக்கின்றார்.

இவ்வாறாக இரு அணிகளிலும் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு போட்டிகள் நடைப்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க கூடியதாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *