தசுன் சானக்கவின் தலைமை நீக்கப்படுமா…?

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பொருப்பில் இருந்து தசுன் சானக்கவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆசிய கிண்ண போட்டியில் இந்தியா அணியுடன் இறுதி போட்டியில் இலங்கை அணி விளையாடி இருந்தது.

எனினும் 50 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது. இது வரலாற்றிலே இலங்கையணி பெற்றுக்கொண்ட மிக குறைந்த எண்ணிக்கையாகும்.
இப்போட்டியினால் தசுன் சானக்கவின் தலைமைத்துவம் தொடர்பில் பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் தான் இவர் பதிவி நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தொடர்ந்து விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமை பதிவி குசல் மெண்டிஸ் ற்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் 39 ஒரு நாள் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அவர் 23 வெற்றிகளைப்பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *