இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக முறைப்பாடு பதிவு..!

இலங்கை அணிக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண இறுதி போட்டி இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் கடந்த ஞாயிற்று கிழமை கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைப்பெற்றது.

இதன் போது இலங்கை அணியாது 50 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.இதில் சந்தேகம் நிலவுவதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து புரவெசி பலய அமைப்பினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இழஞ்சம் ,ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை புரவெசி பலய அமைப்பின் தலைவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் இலங்கையணியானது வரலாற்றிலே மிக குறைந்த ஓட்டங்களை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *