தங்க சங்கிலியை திருடிய நபர் கைது..!

தங்க சங்கிலியினை திருடி சென்றவரை பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அலவத்துகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை, சாரதியின் தலையில் தாக்கிவிட்டு பரித்து சென்றிருக்கிறார். இதனையடுத்து ஊர்மக்கள் அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து பொதுமக்களின் உதவியுடன் குறித்து நபரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த நபரை தங்க சங்கிலியினை வயலில் வீசி எறிந்துள்ளார். இதனையடுத்து சங்கிலியினை பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த தங்கை சங்கிலியின்பெறுமதியானது ஒரு லட்சத்து 50 ஆயிரம்பெறுமதி என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரை கைது செய்து மேலதிக விசாரணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *