வளி மாசடைதல்..!

வளி
மாசடைகிறது.

மனம்
விசாலமில்லாத
மனிதர்களால்.

தான்
மட்டும்
வாழ்ந்தால்
போதும்
என்ற
மனம்.

தனக்கு
மட்டுமானதாக
இந்த
உலகத்தை
கருதும்
வாழ்வு.

அதை
போதிக்கும்
தூண்டிவிடும்
மதம்
இனம்
மொழி
அதிகாரம்
அரசு
போர்
புரட்சி
என்று
அழியும்
சுக
தாண்டவம்.

புகை
காற்று
நீர்
அனல்
சூடு
கதிர்வீச்சு
நச்சு
இரசாயனம்
என்று
செயல்படும்
மனிதமற்ற
உலகம்.

இந்த
பூமி
பந்து
விளையாட
கையில்
கிடைத்த
வஸ்து
அல்ல.

இது
மனிதர்களை
விடவும்
பிரபஞ்சத்தில்
உள்ள
பிற
உயிர்வாழிகளுக்கு
ஆனது!

அந்த
உண்மை
புரியாத
மனதின்
விகாரம்
புரியாத
மனிதர்கள்.

வளி
மாசடைதல்
மனித
தவறுகளால்!

ஏனெனில்
பிற
உயிர்வாழிகள்
இயற்கையை
எளிதாக
கடந்து
போகிறது.

கேலோமி 🌹🌹🌹
மேட்டூர் அணை.
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *