பிரமிட் திட்டத்தின் மூலம் பணம் மோசடி செய்தவர்கள் கைது..!

பிரமிட் திட்டத்தினால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.ஆசை வார்த்தைகளை கூறி மக்களிடம் இருந்து பணத்தினை மோசடி செய்து வருகின்றனர்.எதனையும் அறியாத மக்கள் பணத்தினை கொடுத்து விட்டு ஏமாற்றமடைகின்றனர்.

இந்நிலையில் பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் கண்டியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *