உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது…!

கிரிக்கெட் காச்சல் இப்போது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. அந்த வகையில் உலக வாழ் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியினை ஆவலோடு எதிர்ப்பார்த்து நிற்கின்றனர்.

அந்த வகையில் 2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்ப்பட்டுள்ளது.அதன்படி தசுன் சானக்கதலைவராகவும்,குசல் மெந்திஸ் துணைத் தலைவராகவும்,
குசல் ஜனித் பெரேரா,
திமுத் கருணாரத்ன,
பெத்தும் நிஸ்ஸங்க,
சரித் அசலங்க,தனஞ்சய டி சில்வா,சதீர சமரவிக்ரம
,துனித் வெல்லாலகே ,கசுன் ராஜித,மதிஷ பத்திரன,லஹிரு குமார,தில்ஷான் மதுஷங்க என்போராவர்.

இதேவேளை, உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.
வனிந்து ஹசரங்க,மகேஷ் தீக்ஷனா,தில்ஷான் மதுஷங்க ஆகியோரும்,மேலதிக வீரர்களாக சாமிக்க கருணாரத்ன ,துஷான் ஹேமந்த ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஒக்டோபர் 5ம் திகதி உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைப்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *