பேரலையில் அமைதியாக மூழ்கிடுமா…?

உனக்குள் என்னைத் தொலைத்தேன்

உன் வழியை
தொடர்ந்து
தொலைவதும்
சுகமான
அவஸ்தை தான்
என் விழிகளுக்கும்

ஆழுறக்கத்திலும்
உன் குரல்
செவிகளுக்குள்
கண்களை
மூடி நன்றாய்
தூங்கு என்று
ஆழமான
அதீத காதலுடன்

மொத்த காதலும்
நிரம்பி தளும்புது
உன்னிதழ்
பட்ட தேனீரில்

அம்பின்றி வேட்டையாட
பிடிக்கும் உனை
காதலால் கண்களில்

பேரலையில்
அகப்பட்டு
கொண்டாலும்
அமைதியாகவே
மூழ்கிடுவேன்
உன் நினைவினிலேயே

உனக்குள் நீயும் எனக்குள் நானும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம் நினைவுகளால்

உன் இரு விழி பார்வையால் என் இதயம் நுழைந்து களவாடிய கள்ளியே

உன்னை கண்ட நாள் முதல் நான் என்னை தொலைத்து விட்டேன் இடம் தெரியாமல் அலைகிறேன் தொலைத்த இடத்தை தேடி.

உஷா வரதராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *