கப்பலை வாங்கியவனுக்கு இது கிடைக்குமா..?

காகிதத்தில் கப்பல் விட்டு களித்த காலம்
அட டா அதில் தான்
எத்தனை எத்தனை
ஆனந்தம் …!

அன்று
நன்றாக மழை பெய்தது
நமது வீட்டு வாசலில்
தண்ணீரும் நிரம்பி
இருந்தது …!

நீர் குமிழிகள் பார்த்துப் பார்த்து …!

அதோ அந்தத் தொப்பித் தலையன்
( நீர் குமிழிகளின் பெயர் ) எனது …
இந்தத் தொப்பித் தலையன் உனது என
நீர்க்குமிழிகளை பங்கிட்டு …!

எது எது முன்பே உடையுமோ
அவர்கள் தோற்றவர்கள்
என்றும் … !

கடைசியாக
நீண்ட தூரம் நகர்ந்து
உடைவது வென்றவர்
என்றும் …!

நினைத்த
மகிந்த காலங்கள் இனி வரப்போவதில்லை …!

அதைக் கொண்டாட …
நட்புக்களும் இல்லை …
நேரமும் இல்லை …
ஓடும் நீரில் காகிதக் கப்பல் … அதன் மீது ஏதேனும் ஒரு சிறிய
பொருட்களை வைத்தனுப்பி …!

ஆஹா உண்மையான
கப்பலை வாங்கியவனுக்குக் கூட
அந்த மகிழ்ச்சி கிட்டுமா ? தெரியவில்லை …
அது நீரில் மூழ்கிய
கண்ணீரின் ஈரம்
இன்றும் மனதின்
நினைவடுக்குகளிள் காயவும் இல்லை …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *