மழை வரும் போதெல்லாம் இது நடக்கிறது..!

மழை
வரும்
போதெல்லாம்
காகித
கப்பல்
செய்ய
பழகுவோம்.

கத்தி
கப்பல்
பெரிய
கப்பல்
சிறிய
கப்பல்
என்று
பல்வேறு
மாடல்களில்.

சந்தோஷத்தின்
விழுமியம்
என்று
இங்கு
இருக்க
கூடுமானால்
அது
காலம்
மட்டுமே!

காலம்
கடத்தி
பெறப்படும்
எந்த
ஒர்
பொருளும்
தயவும்
நீதியும்
அன்பும்
தண்டனையும்
பெரியதாக
ஏற்பதற்கில்லை.

சிறிய
காரியத்தில்
ஏற்பட்ட
அந்த
நேர்மையான
அப்பழுக்கற்ற
சந்தோஷத்தை
காலம்
கடந்து
கோடி
பில்லியன்களாலும்
தர
இயலாது.

காலத்தே!
பருவத்தே!
செய்.
இங்கு
காலத்தை
ஆசரி.
நிகழ்காலத்தை
விட்டு
விடாதே!

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985.

எழுதுவது கவிஞர் கேலோமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *