சாதனைப் படைத்த ரோயித் ஷர்மா..!

டெஸ்ட் ,ஒரு நாள் ,T20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரராக ரோயித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில நடைப்பெற்றுவருகிறது.இதில் அண்மையில இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. இதன் போது இந்திய அணிக்கு 273 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது .இதன் போது 35 ஓவர்களில் குறித்த இலக்கை அடைந்து 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

இதன் போது ரோயித் ஷர்மா 84 பந்துகளுக்கு முகம் கொடுத்து 16 பவுண்டரி,5 சிக்ஸருடன் 132 ஓட்டங்களை பெற்று இந்திய அணிக்கு வலு சேர்த்தார்.

இதன் போது உலக கிண்ணத்தில் அதிகூடிய சதத்தினைப் பெற்ற வீரராக ,7 சதங்களை பதிவுசெய்தார்.இதே வேளை டெஸ்ட் ,ஒரு நாள்,T20 போட்டிகளில், மொத்தமாக 453 போட்டிகளில் பங்கு பற்றி 556 சிக்ஸர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.


இச்சாதனையின் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கிறிஸ் கெய்லும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *