உங்களது கண்கள் எங்கு இருக்கிறது…!

நீங்கள் காரில் ஏறிப் போனால்
கடவுளென்ற நினைப்போ …
பாதையோரப் பாத சாரிகள்
என்ன களிமண்ணோ …!

பள்ளிக்குச்
செல்லும் ஆர்வத்தில் வந்த
இந்தப் பிஞ்சு நெஞ்சத்தில்
சேற்றை வாரி இறைத்தாய் …!


கல்வி என்னும் உணவை உண்ணும்
வேளையில் மண்ணை அள்ளிப்
போட்டாய் …!

உனது கண் என்ன
பிடரியிலா இருக்கிறது …!


கண்ணிருந்தும் குருடனானாய் …
மூடா … முடவா …எதைச் சாதிக்க
இந்த ஓட்டம் …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *