மண்ணும் மனிதமும்..!

மண் நலமுடன்
வாழ்ந்தால் தான் …
மண்ணுயிர்கள்
நலமுடன் வாழும் …
மண்ணுயிர்கள்
நலமுடன் வாழ்ந்தால் தான் …
இங்கே மனிதனும்
நலமுடன் வாழ முடியும் …!


இதை அறியா மானுடா ?
உனக்கா பகுத்தறிவு ?
ஆயிரமாயிரம் கேள்விகள்
எனக்குள் …இன்று எல்லாம்
தலைகீழ் ஆனதே …!

இன்று
நீ வாழ …மண்ணைக்
கெடுத்து …
மண்ணுயிர்களின்
வாழ்வை அழித்து …
இதென்ன உனதாசை …
விரைவில் அழிந்து
போகவா ???


உனது பிறப்பின்
தொடக்கமே ஓரறிவு
உயிரில் இருந்துதானே …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *