இளைஞர்களும் விவசாயமும்..!

ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும்
உணவு
தேவை
இருக்கும்போது
விவசாயம்
எப்படி?
மறைந்து
போகும்.
ஒவ்வொரு
மனிதனின்
ஜீன்களின்
டி. என்.ஏ
ஆர். என். ஏ
பதிவிலும்
அவர்களுக்கான
குணங்கள்
பதிவுகள்
மரபுகளோடு
பொதிந்துள்ள
தகவல்களில்
முதல்
தகவல்
மொழி
விவசாயம்
புரட்சி
இது
மட்டுமே!
ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும்
ஒர்
குழந்தை
விவசாயி
மருத்துவன்
புரட்சியாளன்
ஞானி
ஆகியோர்
உள்ளார்ந்து
வாழ்ந்து
கொண்டு
இருப்பர்.
தேவைகள்
வரும்போது
ஒவ்வொருவனுக்குள்ளும்
அது
துடிப்பு
உயிர்ப்பு
பெறும்.
செயற்கை
தன்மை
நச்சு
இரசாயனங்களின்
மதி மயக்கத்தில்
சற்றே
விதிர்த்து
போன
விவசாயம்
வெளிநாட்டு
வேலைகளை
வீசி
எறிந்து
மரபுவழி
இயற்கை
விவசாயத்திற்கு
மாறியுள்ளது.
கவுனி
தினை
சாமை
குதிரைவாலி
போன்ற
பாரம்பரிய
உணவுகள்
வேகமாக
பரவுகின்றன.
துய்ப்பவர்கள்
மரபுவழி
விவசாயத்தின்
அருமை
பெருமை
உணர்ந்தனர்.
இளைஞர்கள்
வேகமாக
இன்னும்
விவசாயத்தின்
நவீனங்களோடு
பழமைகளை
மீட்டு
அடுத்த
தலைமுறைக்கு
தருவர்.
கோயில்
கலசம்
இருக்கும்
வரை
மாடுகள்
இருக்கும்
வரை
இயற்கை
உள்ளவரை
பாலைவனத்திலும்
எரிமலை யிலும்
கடலிலும்
ஆகாசத்திலும்
காற்றிலும்
விவசாயம்
செய்வோம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *