இலங்கை கிரிக்கெட் அணியின் செயலாளர் பதவி விலகல்..!

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

இலங்கை அணியின் தொடர் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபை,மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அடைந்த பாரிய தோல்வியுடன் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் பிரச்சனையில் தலையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அதிகாரிகள் பதவி விலகாவிட்டால், கடுமையான முடிவுகளை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பதவியில் இருந்து மொஹான் டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *