ஐஸ் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது..!
திருக்கோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் , போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்றினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 25 கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்துள்ளார்.இதனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.