மது அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்..!

கொழும்பு கோட்டையில் அமைந்திருக்கின்ற நான்கு மாடிக் கட்டிடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மது அருந்திக்கொண்டிருந்த 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன்,இரண்டு பெண்கள் உட்பட மூவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரன்ன வாடிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் தொடர்பாக சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அதிக விலை கொடுத்து ஏழு போத்தல் மதுபனம் வாங்கி அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்த இடத்திற்கு கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசேல மெண்டிஸ் வந்து தடயவியல் பரிசோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *