நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு..!

2வயது குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்தே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

தமது விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், தேடிய போது, குழந்தை நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கொழும்பு தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தமது குழந்தைகள் மீது கவனயீனமாக இருப்பதே இவ்வாறான உயிரிழப்புகள் இடம் பெற முக்கிய காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *