இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் உயிரிழப்பு..!

உலகமே மிக எதிர்ப்பார்த்திருந்த கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இத்தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் திடீர்ரென மாரடைப்பு ஏற்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருப்பதி துர்க்கா சமுத்திரம் பகுதியை சேர்ந்த ஜோதி குமார் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜோதி குமார் உலக கிண்ணம் இந்தியா கைப்பற்றும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.ஆனால் போட்டியில் மாற்றம் ஏற்பட ஏற்பட மிகுந்த மனவேதனையடைந்துள்ளார்.அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட திருபதி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அதன் போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளை கிரிக்கெட் போட்டியை மைதானத்தில் பார்வையிட்ட 1,30,000 ரசிகர்களின் இதயங்களும் நொருங்கி விட்டது என்று தான் குறிப்பிடலாம்.

மேலும் இந்தியாவின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் பாதியிலேயே பலர் மைதானத்தை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *