பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது..!

59வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நிலையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே குற்றச் செயல் ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில்,ஒருநாள் நீதிமன்றம் சென்று கையொழுத்து இட்டுவரும் போது அங்கு கடமையாற்றி வரும்கல்முனை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ,குறித்த பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளர்.

இதனையடுத்து குறித்த பெண் கொழும்பிலுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தெரிவித்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில்,
கல்முனை கடற்கரை பகுதியிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச உழல் பிரிவினர்,மாறுவேடத்தில் சம்பவதினமான நேற்று காலை 9.30 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த பெண் பலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரியை குறித்த விடுதிக்கு வருமாறு அழைப்பை எடுத்த நிலையில், அங்கு சென்ற பொலிஸ் அதிகாரி , அங்கு கண்காணிப்பில்,ஈடுபட்டுக் கொண்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 28 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை கொழும்பிற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *