இஸ்ரேலின் தாக்குதலில் 240 பாலஸ்தீனியர்கள் பலி…!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.

தரைவழி மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேலானது மேற்கொண்டு வருகின்றது.

கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலானது முழுவீச்சில் நேற்றைய தினம் தாக்குதலை நடாத்தியுள்ளது. இதன் போது பாலஸ்தீனியர்கள் 240 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் பல பொது மக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை ரபா எல்லை யூடாடாக பாலஸ்தீன மக்களுக்கான நிவாரண உதவிகளை கொண்டு செல்ல இஸ்ரேலானது தடை விதித்துள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *