மழையுடனான வானிலை…!

கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும்  அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம்  மாவட்டங்களில்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்  காணப்படுகின்றது.

மத்திய,  சப்ரகமுவ,மேல், தென், கிழக்கு  மற்றும் ஊவா  மாகாணங்களின்  சில இடங்களில் 100 mm வரையிலான  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின் சில இடங்களில்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *