ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 08பேர் பலி..!

நேற்றைய தினம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நில அதிர்வின் காரணமாக வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கின, வீதிகள் இரண்டாக பிளந்தன,மின்சாரம் தடைப்பட்டது.

இதனிடைய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 08 பேர் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலநடுக்கங்களானது ரிச்டர் அளவில் 4.0 மற்றும் 7.6 ஆகிய அளவுகளில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *