அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்து..!

இந்தோனேசியாவின் கோலா பூபான் கடற்கரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகானது ரோகிங்கியா முஸ்லிம்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது அங்கு இருந்த மீனவர்களால் 6 பேர் காப்பற்றப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர்.எனினும் படகில் அதிக பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன் போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

கரை சேர்ந்த அகதிகள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பங்களதேஷத்திலிருந்து பல அகதிகள் கடல் வழியாக இந்தோனேசியா,மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.

இவ்வாறான நிலையிலே குறிப்பிட்ட விபத்தானது நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *