பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

காராச்சி மாகாணத்திலுள்ள துர்பாட் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை, உடனடியாக பாகிஸ்தான் இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதன் போது 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பயங்கர வாதிகளின் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாகவும்\கடற படை விமான தளத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *