தொலை பேசி வெடித்து 04 பேர் உயிரிழப்பு..!

தொலைப்பேசி வெடித்ததன் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள பல்லவபுரம் பகுதியில் சனிக்கிழமை இரவு (23) ஜானி என்ற கூலித்தொழிலாளி,தனது வீட்டில் தொலைபேசியை சார்ஜ் போட்டிருந்தார்.

இதன் போது வீட்டில் சரிகா (10), நிகரிகா (8), சன்ஸ்கர் (6), களு (4) ஆகிய 4 குழந்தைகளும் மனைவி உறங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

குறித்த தீ பரவலினால், படுகாயமடைந்த மனைவி உட்பட குழ​ந்தைகள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,

குழந்தைகள் நால்வரும் உயிரிழந்துள்ளதோடு மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,கணவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *