போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர் ஹமாஸ் போராளிகள்..!

ஹமாஸ் போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும்,இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் ஐ.நா சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

எனினும் போர் நிறுத்த கோரிக்கையை ஹமாஸ் போராளிகள் நிராகரித்துள்ளனர்.

முழுமையான போர் நிறுத்தம்,காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுதல்,இடம் பெயர்ந்த மக்கள் அவர்களுடைய இடங்களுக்கு திரும்புதல்,பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்ளுதல் ஆகிய கருத்துக்களுக்கு இதுவரை இஸ்ரேலானது பதிலளிக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது.

இதே வேளை ஹமாஸ் போராளிகளை அழிக்கும் வரை போர் தொடுப்போம் என் நெதன் யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *