இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறை..!

2016 ம் ஆண்டு கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல விகாரை தொடர்பில் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட கலபொடவத்த ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனையும்,ஒரு லட்சம ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *