பஸ் விபத்தில் 45 பேர் உயிரிழப்பு..!

தென் ஆப்ரிக்காவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளும் பொருட்டு பயணித்த வேளை மாமட்லகலாவில் அமைந்திருக்கும் பாலத்தை கடக்கும் தருணம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி பஸ் பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது அதிஷ்டவசமாக 8 வயது சிறுமி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது பஸ்ஸானது முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்திற்கு தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *