பல்வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் ,இறுதியில் நடந்தது என்ன?

பல் வலி பொறுக்க முடியாமல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட யுவதியொருவர் துரதிஷ்டவசமாக வைத்தியசாலையில்,

அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை, மொரவக்க, பரகல பிரதேசத்தில் வசித்து வந்த ஹன்சிகா நவரத்ன என்ற 29 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஏற்பட்ட பல்வலி காரணமாக மாயா தெனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஊசி மற்றும் சிகிச்சை பலனின்றி 29 ம் திகதி அதிகாலை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கபபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *