இதற்கும் தாகம் உண்டு

மேகம்


மேகத்துக்கும் தாகம் உண்டு
அது அலைந்தலைந்து கடலில்
சென்று …

நீரை அள்ளிக் கொண்டு வந்து
தாயன்பில் பால் சொரியும்
அதையே நாம் மழை என்கிறோம் …
ஓருயிரா ஈருயிரா …
கோடானு கோடி உயிர்கள்
இப்பூமியிலே அவளாலே
வாழுகிறோம் தெரியாதா ?
இல்லை புரியா ?

அந்த
மேகத்துக்கும் மோகம் உண்டு …
அது மரங்கள் எனும் காதலனால்
தீண்டப்பட வேண்டும் … எனும்
ஆசை அதற்கு எப்போதும் உண்டு …

அட …மானுடரே கொஞ்சம்
கேளுங்களேன் …உண்மைக்
காதலுக்கு தடை விதிக்கும்
உங்கள் புத்தியையெல்லாம்
மனித இனத்தோடு நிறுத்திக் கொண்டு
மரங்களை யெல்லாம் வெட்டி வெட்டி
மழை மேகமும் மரங்களும் செய்யும்
செய்யும் காதலைத்
தடுத்து அழியாதீர்கள் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *