தாய்வானில் நிலநடுக்கம்-07 பேர் உயிரிழப்பு,730 பேர் காயம்..!

தாய்வானின் தலைநகரான தைப்போவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியிருந்தது.இந்நிலநடுக்கமானது 35 கி.மீ ஆழத்தில் நிலைஶ்ரீ கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன,மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பல இடங்களுக்கு அங்கும் இங்கும் ஓடினர்.

மேலும் 07 பேர் உயிரிழந்ததுடன் 730 பேர் காயமடைந்துள்ளனர்.சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக ஜப்பானில் கடல் அலைகள் உயர எழும்பின.

இந்நிலநடுக்கத்தின் அதிரவலைகள் சீனா,ஹொங்கொங்,ஜப்பான்,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *