இந்த வருடமும் வல்வையில் கணிதச்சமர்| முன்னுரிமைக்கு மாணவர்களே  முந்துங்கள்

இந்தவருடமும் வல்வெட்டித்துறையில் மாணவர்கள் பங்குபற்றி போட்டிபோடும் கணிதச்சமர் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

வல்வைச்சந்தியில் பிரமாண்டமாக இடம்பெறும் இந்த கணிதச்சமரை வழமைபோலவே
ஐக்கிய ராச்சிய சிதம்பரா கணிதப்போட்டிக்குழு ஏற்பாடு செய்கிறது.

நேரடியாக மாணவர்கள் சவாலோடு போட்டி போடும் இந்த கணிதச்சமர் நிகழ்ச்சி, வல்வைமண்ணின் பெருந்திருவிழாவான இந்திரவிழா நாளில் வழமைபோலவே சிறப்பாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்வையில் கணிதச்சமர்


ஏப்பிரல் மாதம் 23ம் திகதி இடம்பெறவுள்ள இந்த கணிதச்சமரில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களை முன்னுரிமை வாய்ப்புக்களைப்பெற ஏப்பிரல் 20ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றிபெறும் மாணவர்களுக்கு உடனடிப்பரிசில்களோடு தயாராக வருகிறது சிதம்பரா கணிதப்போட்டிக்குழு.


இந்திர விழாவிற்காக தாயகம் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரே நாளில் இப்படியான கல்வியியல் சார் நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை அளிப்பதும்,தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக வெற்றியோடு பயணிப்பதும்  பலரது பாராட்டையும் இந்த கணிதச்சமர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *