போலி கடவுச்சீட்டுடன் இருவர் கைது..!

இலங்கை வர முயற்சித்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் வைத்து வைத்து இந்திய குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயதான ஆணும்,40 வயதான பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும்,சில காலம் பெரமபலூரில் வசித்து வந்த நிலையில் தங்களுக்கான இந்திய அடையாள அட்டையினையும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் இலங்கை செல்ல முடிவு செய்து பெரம்பலூர் முகவரியில் போலி கடவுச்சீட்டினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை இந்திய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *