உயிரிழந்த பெண்ணிற்கு பிறந்தது குழந்தை..!

காஸாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது இதில் 22 பேர் உயிரிழந்தனர்.

குறித்த தாக்குதலில் உயிரிழந்த 30 வார கால கர்ப்பமாக இருந்த சப்ரீன் அல்சகானி என்ற பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்த வைத்தியர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றினர்.

தற்போது பிறந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறனர். 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் வைத்தியசாலையில் இருக்கும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை சகானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பியுள்ளதாக அவரது உறவினர் ரமி அல்ஷேக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *