மாட்டுடன் மோதி விபத்து..!

பொலன்னறுவை , வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை , வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞராவார்.

இவர் வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது,

வீதியின் குறுக்கே நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் வெலிகந்த வைத்தியசாலையில்,

அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *