மே10 முதல் உலகமெங்கும் திரைக்கு வரும் “ஊழி”

பலராலும் எதிர்பார்க்கப்படும் ஊழி திரைப்படம் மேமாதம் 10ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளுக்கு வருகிறது. தமிழர்கள் வாழும் நாடுகளின் முன்னணி நகரங்களில் இருக்கும் திரையரங்குகளுக்கு ஊழி திரைப்படம் வரவிருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தகவல்களின் படி (09-05-2024) இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்  தணிக்கைக்குழு இன்னும் தணிக்கை சான்றிதழை வழங்கவில்லை எனவும் பல்வேறு தடங்கல்கள் இலங்கையில் ஏற்படுத்தப்படுவதாகவும் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஜோசப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நாளை(10/05/24) காலைவரை காத்திருக்கப் போவதாகவும் அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முற்றிலும் இலங்கையிலேயே படமாக்கப்பட்ட ஊழி திரைப்படம், எமது மக்களின் கதைகளை இந்த திரைப்படம் பேசும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

உலகமெங்கும் வெளிவரும் நாடுகள் , நகரங்களின் பட்டியலை இங்கே காணலாம் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *