டென்மார்க் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்பு இரகசியங்களைக் கசியவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு டென்மார்க்கின் புலனாய்வுத்துறையின் நிர்வாகத் தலைவர் லார்ஸ் பிண்ட்சன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடன் புலனாய்வுத்துறை முன்னாள், தற்கால அதிகாரிகள் நால்வரும் டிசம்பர் மாதத்தில் அதே குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 

லார்ஸ் பிண்ட்சனுடன் கைது செய்யப்பட்ட அதிகாரிகளில் இருவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் எனவும் ஆனாலும், அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்தும் நடந்து வருவதாகவும் டேனிஷ் செய்திகள் குறிப்பிடுகின்றன. பிண்ட்சன் தொடர்ந்தும் எத்தனை காலத்துக்குப் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார் என்ற கேள்விக்கு டனிஷ் நீதித்துறை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்