87 ஆவது வயதில் முதுகலைப்பட்டம்- சாதனையை பதிவுசெய்யும் தமிழ் பெண்

கனடாவின் வசித்துவரும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் வரதலட்சுமி சண்முகநாதன் தமது 87வது வயதில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் மிக வயதுகூடிய ஒருவர் பெறும் முதுகலைப்பட்டம் இது என்ற சாதனையையும் திருமதி.வரதலட்சுமி சண்முகநாதன் அவர்கள் பெறுகிறார்.

கோவிட்19 கட்டுப்பாடுகள் நிமிர்த்தம் இணையவழியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கான முதுகலைப்பட்டம் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

இது அவருக்கு கிட்டும் இரண்டாவது முதுகலைப்பட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் ஆசிரியராக பணிசெய்த இவர் இந்தியா, ஆபிரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளிலும் வாழ்ந்த இவர் இப்போது தனது குடும்பத்துடன் கனடாவில் வசித்து வரும்போது இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார்.

அத்துடன் சிறீலங்காவின் உள்நாட்டுப்போர் மற்றும் அமைதிப்பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஒரு ஆய்வுக்கட்டுரையையும் தொகுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.