ஆறுமுக நாவலர் சிலை அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டப நுழைவாயிலில் ஆறுமுக நாவலர் சிலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் அனுமதியுடனும் உறுதியோடும் இந்த சிலை மண்டப வாயிலில் நிறுவப்பட்டது.

கார்த்திகை தீபத்திருநாளாகிய இன்று இந்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நந்திக்கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த நிகழ்வில், யாழ் மாநகரசபை ,மற்றும் சைவ மகா சபையினர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.