வலி்

அந்த நெடிய பயண முடிவிடம் செல்ல குறுக்குப் பாதை இப்பிறவி
தான்…..

வாழ்க்கைப் போலொரு
குறுக்குப்பாதை
இல்லை
அந்தப் பயணத்திற்கு……

பிறந்து,
வலித்து,
வாழ்ந்து,
சாகும் தொடர்ச்சியான
நிகழ்வில்,
இறப்பு என்பது….
மட்டும் தான் நோக்கமாக இருக்கிறது….

வாங்கிய வலிகள்
எதற்கு
என்பதுதான்
பெரும் புதிர்…..

வலிகள்
ஒருவேளை…
பயணத்திற்கு
கொண்டு செல்லும்
பணக்கட்டுகளோ…
ஆ..நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறேன்
வலி கரண்சிகளை….

இப்பிறபின்
பின் அனேகமாய்
ஒரு நட்சத்திரத்திற்கும்
மற்றோர்
நட்சத்திற்கும்
இடையில்
உள்ள
பெருவெளியை
வாங்குமளவிற்கு
வலி கரண்சிகள்
இருக்கும் என்னிடம்…..
..,..தர்ஷிணிமாயா3/12/2021